இயேசு சபையின் அருள்கடலார் சமூக போதனை, பவுலடியாரின் பார்வை, தலித் மக்கள், பெண்கள், இளையோர், குழந்தைகள், சமய நல்லிணக்கம், இயற்கை என்ற பல்வேறு கோணங்களில் கூட்டியக்க திருஅவையை அணுகியதன் விளைவே இறையாட்சிப் பயணிகளாக என்னும் இந்நூல்.
ஊடகம் இல்லாமல் உலகம் இல்லை. ஊடகம் இல்லாமல் உறவுகள் இல்லை. ஊடகம், தனிநபர், சமூகம், உறவு, அறநெறி என்று ஊடகம் தொடர்புடைய அனைத்து அம்சங்களையும் அலசி சிறப்பான ஆறு தலைப்புகளில் தொகுத்து கூறியுள்ளார் இந்நூல் ஆசிரியர்.
தன்னையறிந்து தன் திறமைகளை கண்டுணர்ந்து தன்னம்பிக்கையும் சூழ்நிலைகளை தமதாக்கிக்கொள்ளும் விவேகமும் உடையவர்களாக செய்யப்படுவது சாதனையாளர்களின் அடிப்படை பண்பு. எல்லோரும் சாதிக்கலாம் என்பதற்கு இந்நூல் வழிகாட்டுகிறது.
நாம் அன்றாடம் மேற்கொள்ளும் சாதாரண சந்திப்புகளில் மறக்கடிக்கப்படும் மனிதநேய மதிப்பீடுகளை இருபது தலைப்புகளில் அழகாக விளக்குகிறது இந்நூல்.
பல்வேறு துறைகளில் சாதித்த மனிதர்கள் கடின உழைப்புக்கும் முயற்சிகளுக்கும் பின்னால் ஒரு புள்ளியில் அல்லது தருணத்தில் சாதனையாளர்களாக மாறுகிறார்கள். அவர்களின் வாழ்வும் செயல்பாடுகளும் ஏதோ ஒரு வகையில் சமூகத்திற்கு விழிப்பூட்டிக்கொண்டுதான் இருக்கின்றன.
ஒருவரின் செயல்களே அவரின் சொற்களின் நம்பகத்தன்மைக்கு சான்றளிக்கும். தம் செயல்களின் வாயிலாக வாக்கையும் வாழ்வையும் இணைத்துப் பயணிக்கும் மனிதர்கள் மாமனிதர்களாகிறார்கள். இத்தகைய வல்ல செயலில்தான் இயேசு முத்திரை பதிக்கிறார்.
சமூகம் மற்றும் தனிமனித வாழ்வியல் எதார்த்தங்களை பகுப்பாய்வு செய்து மாற்று பாதையை சுட்டிக்காட்டி நெறியாக்கம் செய்கிறது முற்போக்கு பிற்போக்கு என்னும் இந்நூல்.
Subscribe to our website mailling list and get a Offer, Just for you!
Sed ut perspiciatis, unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium