கவிநயமும் கருத்து நயமும் குழைக்கப்பட்டு குதூகலமாக அமைந்துள்ளது மரியாஞ்சலி.
பிறருக்கான மனிதர்கள், ஒருங்கிணைந்த ஆளுமை வளர்ச்சி, விளிம்புநிலையினருக்கான முன்னுரிமை ஆகியவற்றை சரியாக புரிந்துகொண்டு ஆசிரியர்களை வழிகாட்டிகளாக மாற்றவும், மாணாக்கர்களை இலக்காக கொள்ளவும் ஒரு சிறந்த கையேடாக இளையோர் ஆன்மிகம் படைக்கப்பட்டிருக்கிறது.
மறைப்பணியாளர் சீகன்பால்க் வாழ்க்கை வரலாற்றையும் அவரது குடும்பம், பிறப்பு, வளர்ந்த சூழல், இறைவனின் அழைப்பு, உடல் அளவிலும், சமூக அரசியல் அளவிலும் சந்தித்த இடர்ப்பாடுகள் தமிழ் நாட்டில் ஆற்றிய மறைப்பணி தமிழ்ப்பணி திருவிவிலிய தமிழாக்கம், இறைவனடி சேர்ந்த இறுதிக்காலம் என்று பல்வேறு கருப்பொருளை தாங்கியுள்ளது இந்நூல்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகளைக் களைந்து பாலினச் சமத்துவத்தை நிலைநிறுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டதாகவே இந்நூல் அமைந்திருக்கிறது. இறையியல் பார்வையோடு எழுதப்பட்ட இந்நூல் சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம் ஆகிய துறைகளில் பெண்கள் அடைந்துள்ள சாதனைகளையும் பட்டியலிடுகிறது.
Subscribe to our website mailling list and get a Offer, Just for you!
Sed ut perspiciatis, unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium